தனிநபர் ஆக்கிரமிப்புகளால் பொது மக்கள் அவதி !

திண்டுக்கல் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் புகார் செய்தனர்.

Update: 2024-02-28 06:09 GMT

பொதுமக்கள் புகார்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் நீலமலைக்கோட்டை, கரியகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பொதுப்பாதையை சில தனிநபர் ஆக்கிரமிப்புகளால் அவசர மருத்துவ தேவைக்கு செல்ல முடியாதவாறு ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றி தருமாறு மனு அளித்தனர். இந்த ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளாக உள்ளது இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. கர்ப்பிணிப் பெண்களை உடனடியாக அழைத்துச் செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி ஆர்டிஓ உட்பட வருவாய் துறையிலும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் செய்வது அறியாத தவித்து வருகிறோம் என்றனர்.
Tags:    

Similar News