பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மாற்றுவதை கண்டித்து சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது

Update: 2024-02-16 19:13 GMT
குமரியில் தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்ய கேட்டும்,  விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.     

கன்னியாகுமரி மாவட்டத்தில்  குழித்துறை மற்றும் நாகர்கோவில் போன்ற இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் விஜய மோகன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த போராட்டத்தில் குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன் ஆசை தம்பி, முன்னாள் நகர் மன்ற தலைவர் டெல்பின் உட்பட ஐஎன்டியுசியு ,சிஐடியு, எல்பிஎ உட்பட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News