மாநகர பேருந்து தீப்பிடிப்பு - மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம்

அடையார் பணிமனை அருகே அரசு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2024-07-04 08:19 GMT
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் M/s.Torrent Gas Pvt Ltd நிறுவனம் மூலம் பதிவு எண் TN-01AN-1569 (ADC800) கொண்ட பேருந்து அங்கீகரிக்கப்பட்ட M/s. Chennai Auto Gas மையம் மூலமாக CNG (Retrofitment kit Conversion) மாற்றம் செய்யப்பட்டு 28.06.2024 அன்று முதல் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த  02.07.2024 அன்று மதியம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்தை தடம் எண் 102, பிராட்வே-லிருந்து 10 பயணிகளுடன் சிறுசேரி நோக்கி சென்று கொண்டு இருந்தபோது, மதியம் சுமார் 2.00 மணி அளவில் அடையார் பணிமனை அருகில் ஓட்டுநர் என்ஜின் அருகே புகை வருவதை கவனித்த உடன் பேருந்தை உடனடியாக நிறுத்தி, பயணிகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இறக்கிவிடப்பட்டனர். காவல் துறை மற்றும் தீ அணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு அருகில் இருந்த அடையாறு பணிமனைக்கு பேருந்து பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் துரித நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
Tags:    

Similar News