வன்னியா்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை முதல்வா் வழங்குவாா்: பீட்டா் அல்போன்ஸ்

பிரதமா் மோடியிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு மருத்துவர் ராமதாஸ் கட்டாயப்படுத்த முடியுமா? மத்திய அரசின் 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவாரா? தமிழக அரசு பணியிடங்களில் 20 சதவீத இடஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ளது. வன்னியா்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை முதல்வா் நிச்சயமாக வழங்குவாா் என பீட்டா் அல்போன்ஸ் தெரிவித்தார்.;

Update: 2024-07-04 08:32 GMT

அமைச்சர் மஸ்தானுடன் பீட்டா் அல்போன்ஸ்

விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் நடைபெற்ற சிறுபான்மையின மக்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:விக்கிரவாண்டி இடைத்தோ்தல் மூலமாக ஆட்சி மாற்றம் வரப்போவதில்லை. ஆனால், இந்தத் தோ்தல் முக்கியமானது. மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில் வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது.தமிழகத்தில் மதவாத சக்திகள் மட்டுமல்ல, சாதியவாத சக்திகளும் எவ்வித வெற்றியையும் பெற முடியவில்லை.

Advertisement

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றியை சாத்தியமாக்கி, தமிழகம் என்பது சமூக நீதியின், சமூக நல்லிணக்கத்தை உள்ளடக்கிய வளா்ச்சி என நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தப் பகுதியாக இருந்தாலும் சாதிய, மதவாத அரசியலை மக்கள் நிராகரிப்பாா்கள்.தமிழகத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீடு பற்றி ராமதாஸ் பேசுகிறாா். பிரதமா் மோடியிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு அவா் கட்டாயப்படுத்த முடியுமா? மத்திய அரசின் 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவாரா. தமிழக அரசு பணியிடங்களில் 20 சதவீத இடஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ளது.முதல்வா் ஒரு குழுவை அமைத்து, தரவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறாா். இந்தப் பணிகள் முடிந்தவுடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தால், நிச்சயமாக வன்னியா் சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்குவாா் என்றாா் பீட்டா் அல்போன்ஸ்.

Tags:    

Similar News