பரமத்தி வேலூரில் ரூ.10.85 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்தி வேலூர், பொத்தனூர், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சத்து 85 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.;

Update: 2024-07-05 05:15 GMT

தேங்காய் பருப்பு ஏலம் 

பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. தேங்காய் பருப்பு ஏலம் எடுப்பதற்கு வெள்ளக்கோவில், சிவகிரி, அவல் பூந்துறை, முத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.

Advertisement

கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 12 ஆயிரத்து 589 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.94.29-க்கும், குறைந்த பட்சமாக ரூ.90.69-க்கும்‌, சராசரியாக ரூ.93.99 க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ரூ.84.88-க்கும், குறைந்த பட்சமாக ரூ.77.29-க்கும், சராசரியாக ரூ.82.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 57 ஆயிரத்து 690-க்கு ஏலம் போனது.

நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு ‌11 ஆயிரத்து ‌‌590 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.94.90-க்கும், குறைந்த பட்சமாக ரூ.90.10-க்கும், சராசரியாக ரூ.93.33-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பை அதிக பட்சமாக ரூ. 86.77-க்கும், குறைந்த பட்சமாக ரூ.74.88-க்கும், சராசரியாக ரூ.82.83-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட்சத்து 85 ஆயிரத்து 750-க்கு ஏலம் போனது.

Tags:    

Similar News