காங்கேயத்தில் ரூ.1லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ. 1லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

Update: 2024-07-03 04:45 GMT
காங்கேயம் வேளாண் ஒழுகுமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1177 கிலோ தேங்காய் பருப்புகளை 27 மூட்டைகளில் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். அதன்படி ஒரு கிலோ தேங்காய் பருப்பு குறைந்தபட்சம் விலையாக ரூ 72.90க்கும் ,அதிகபட்சமாக 94.90க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 198 ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
Tags:    

Similar News