புறநகர் பேருந்து நிலைய இடத்தை ஆட்சியர் ஆய்வு
By : King 24X7 News (B)
Update: 2023-11-17 08:52 GMT
ஆய்வு பணியில் ஆட்சியர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட மங்கரட்டுமேடு பகுதியில் புதியதாக அமைய உள்ள புறநகர் பேருந்து நிலைய இடத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்,உமா அவர்கள் மற்றும் நகர் மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ் பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் சேகர், வட்டாட்சியர் விஜயகாந்த் அவர்கள், மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு அலுவலர் ஸ்ரீதர்,நகராட்சி பொறியாளர் சரவணன், மற்றும் அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் ராதாசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.