தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணியை கலெக்டர் ஆய்வு!
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா (12.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Update: 2024-07-12 11:02 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாஞ்சான்விடுதி ஊராட்சி, வீரடிப்பட்டி கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக குளம் அமைக்கும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா (12.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) பொறி.பரமசிவம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.