எனக்காக வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி : மாவட்ட ஆட்சியர்

உங்கள் பிரார்த்தனைதான் என்னைக் காப்பாற்றியது. நான் இப்போது நலமாக உள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.

Update: 2024-07-02 07:58 GMT

குறைதீர் முகாமில் ஆட்சியர் மகாபாரதி 

இதயக் குழாயில் ஏற்பட்டிருந்த 3 அடைப்புகளின் காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு நேற்று  காலை மயிலாடுதுறை திரும்பிய  மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஓய்வு ஏதும் எடுக்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று மனுக்களை பெற்றார். உங்கள் பிரார்த்தனைதான் என்னைக் காப்பாற்றியது. நான் இப்போது நலமாக உள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார். சிகிச்சை முடிந்து ஊர் திரும்பிய நாளன்றே மாவட்ட ஆட்சியர் பணியில் சேர்ந்து பணியாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Tags:    

Similar News