திருப்பூரில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு

திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-03-17 10:23 GMT

திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வரும் ஏப். 19-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவரிடமோ, படைக்கல சட்டப்படி படைக்கலனை ஒப்படைத்து அதற்கான ரசீகளை பெற்றுக்கொள்ளலாம்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்டதற்கான ரசீது நகல்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். படைக்கலனை ஒப்படைக்க தவறும்பட்சத்தில் படைக்கல சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News