முள்ளிப்பட்டு அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு
முள்ளிப்பட்டு அங்கன்வாடி மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் கழிப்பறைகள் பராமரிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் ஆய்வு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-22 09:47 GMT
முள்ளிப்பட்டு அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் கழிப்பறைகள் பராமரிப்பு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் ஆய்வு செய்ய வந்தார் அப்போது முள்ளிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி சித்ரா ,வெங்கடேசன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் இரவி சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.உடன் ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் பலர் உடன் இருந்தனர்.