திருச்சுழி ஒன்றிய பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-07-04 04:52 GMT

 திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கீழசேகரநல்லூர் ஊராட்சி மேலகண்டமங்களம் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.25.64 இலட்சம் மற்றும் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, கீழகண்டமங்களம் ஊராட்சி சித்தலக்குண்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.12.73 இலட்சம் மதிப்பில் புணரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில் வில்லுப்பாட்டு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதை பார்வையிட்டார். பின்னர், கொட்டம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.57 இலட்சம் மதிப்பில் புணரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News