உயர் கல்வி உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலத்தில் நடந்த குறைதீர் முகாமில் மாணவருக்கு உயர் கல்வி உதவித்தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.

Update: 2024-07-03 06:28 GMT

காசோலை வழங்கிய ஆட்சியர் 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவித் திட்டத்தின்கீழ், உயர் கல்வி உதவித்தொகைக்கான காசோலையினை மாணவருக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News