நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

பெரம்பலூரில் 38 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

Update: 2024-06-25 07:23 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (24.06.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1,200 மதிப்பீட்டில் நகரும் தள்ளு வண்டிகளும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.3,000 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கை (கார்னெர் சீட்), 1 பயனாளிக்கு ரூ.7,900 மதிப்பீட்டில் சக்கர நாற்காலியும், 20 பயனாளிகளுக்கு தலா ரூ.2,780 பயனாளிகளுக்கு காதொலி கருவியும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.9,050 மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டியும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1,05,000 மதப்பீட்டில் மின்கலன் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் (NEO MOTION) என மொத்தம் 38 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.6,27,500 மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் போன்ற நிகழ்வுகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களைத் தேடி மனுக்களை கொடுக்கும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 416 மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வீரமலை, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News