அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க கல்லூரி முதல்வர் அழைப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர,விண்ணப்பிக்க கல்லூரி முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-05-10 01:36 GMT

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க கல்லூரி முதல்வர் அழைப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வசந்தி பத்மநாபன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஏ தமிழ், பி ஏ ஆங்கிலம், பிகாம், பிஎஸ்சி கணிதம் மற்றும் பி எஸ் சி கணினி அறிவியல் ஆகிய இளம் கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். மாணவர்கள் விண்ணப்பத்தை வரும் 20ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் எனவும், இணையதள வசதி இல்லாதவர்கள் இக்கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News