கல்லூரி மாணவி தற்கொலை

சேலம் வீராணத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான ஜனனி தூக்கு போட்டு தற்கொலை செய்தநிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

Update: 2024-06-06 05:35 GMT

பைல் படம்

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் ஜனனி (வயது19). அரசு கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கியவாறு உயிருக்கு போராடினார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜனனி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News