விவசாயிகளுக்கு கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் !

வஉசி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பயிலும் மாணவிகள் இனக்கவர்ச்சி பொறி குறித்த செயல் விளக்கத்தினை அப்பகுதி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

Update: 2024-04-26 05:36 GMT

கல்லூரி மாணவிகள் 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரம் ஊர்க்காடு கிராமத்தில் இன்று (ஏப்.26) காலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வஉசி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பயிலும் மாணவிகள் இனக்கவர்ச்சி பொறி குறித்த செயல் விளக்கத்தினை அப்பகுதி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் கல்லூரி முதல்வர் தேரடி மணி தலைமையில் பேராசிரியர்கள் காளிராஜன், ஷீலா கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News