தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் முதல் பலியானவருக்கு நினைவுநாள்

தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய முதல் சத்திய கிரக போராட்டத்தில் முதல் பலியான மயிலாடுதுறை சாமி நாகப்ப படையாட்சி 115 ஆவது நினைவு தினம் தமிழக அரசு வன்னியர் மேம்பாட்டு வாரியத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2024-07-08 05:03 GMT

சுவாமிநாகப்படையாட்சி

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள வன்னிய மேம்பாட்டு இயக்க வளாகத்தில் தமிழ்நாடு வன்னிய குல சத்திரிய பொது அறநிலைய பொறுப்பாட்சிகள் மற்றும் நிலை கொடைகள் வாரிய வட்டாட்சியர் ரமேஷ், மண்டல அலுவலர் சாம்ப மூர்த்தி, வன்னியர் மேம்பாட்டு இயக்கத் தலைவர் லோகசம்பத், தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பு.தா.இளங்கோவன் உட்பட பலர் காலை 8 மணிக்கு சுவாமிநாகப்படையாட்சியின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Tags:    

Similar News