அரசு பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டவரால் பரபரப்பு

சாத்தூர் அருகே அரசு பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-07-01 03:50 GMT
சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் மேட்டமலை பகுதியில் சாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது மோதுவது போல் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் அரசு பேருந்தை இருசக்கர வாகனத்தை மறித்து அரசு பேருந்து ஓட்டுனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேருந்து ஓட்டுநருக்கும் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்திக பேருந்து பயணிகள் இருவரையும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர் தனது வாகனத்தை எடுத்து சென்றபின் பேருந்து அங்கிருந்து சென்றது.
Tags:    

Similar News