பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு- மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.

Update: 2024-07-01 04:08 GMT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

தேனி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடத்த வேண்டும் என தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேனி மாவட்டத்தில் ஜூலை ஒன்பதாம் தேதி காலை 9:30 மணி முதல் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News