பண்ருட்டி அருகே மனைவியை காணவில்லை என புகார் அளித்த கணவன்

மனைவியை காணவில்லை என புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-01-18 06:02 GMT
மனைவி காணவில்லை - புகார் அளிப்பு
கடலுார் மாவட்டம் புவனகிரி அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ், இவரது மனைவி ரேவதி. இவர் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கீழக்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் முந்திரி கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 12 ஆம் தேதி வேலைக்கு சென்ற ரேவதி வீடு திரும்பவில்லை. இது குறித்து கிருஷ்ணராஜ் கொடுத்த புகாரில் முத்தாண்டிக்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News