பெண்ணை தாக்கிய நான்கு நபர்கள் மீது புகார்

விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டி பகுதியில் பெண்ணை தாக்கிய நான்கு நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-01-20 09:01 GMT

 பெண்ணை தாக்கிய நான்கு நபர்கள் மீது புகார்

விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டி ராஜீவ் காந்தி காலனி பகுதியைச் சார்ந்தவர் கன்னியம்மாள் வயது 43. இவர் கடந்த 15 ஆம் தேதி ராஜீவ்காந்தி காலனியில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மகேஷ் குமார், முருகன், முருக லட்சுமி விஜயலட்சுமி ஆகிய நான்கு நபர்களும் சேர்ந்து கொண்டு கண்ணியமாலை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் காயம் அடைந்த கண்ணியமாலை தரக் குறைவாக பேசி கொலை மிரட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காயம் அடைந்த கண்ணியம்மாள் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News