அரசு பஸ் மீது கல் எறிந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

குமாரபாளையம் அருகே அரசு பஸ் மீது கல் எறிந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-09 01:05 GMT

குமாரபாளையம் அருகே அரசு பஸ் மீது கல் எறிந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அரசு பஸ் மீது கல் எறிந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் பெரமனூர் பகுதியை சேர்ந்தவர் அழகரசன், 48. சேலம் மெய்யனூர் கிளை பணிமனை அரசு பஸ் ஓட்டுனர். இவர் நேற்றுமுன்தினம் இரவு 07:10 மணியளவில், சேலம், கோவை புறவழிச்சாலையில், கோவையிலிருந்து சேலம் நோக்கி, குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் வந்த போது, இடது பக்க கண்ணாடி மீது அடையாளம் தெரியாத நபர் கல் எரிந்ததில் கண்ணாடி உடைந்தது. பயணிகளை வேறு பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு இருந்த போது, மற்றொரு அரசு பஸ் கண்ணாடி மீது மீண்டும் கல்லால் தாக்கியதில் வலது புற கண்ணாடி உடைந்தது. இது குறித்து அழகரசன் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்து, கள் எறிந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News