முதியவரை தாக்கி காயப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் மதுரை சாலையில் பகவத்சிங் என்ற முதியவரை தாக்கி காயப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார்

Update: 2024-02-20 16:06 GMT

காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் தாலுகா ஆபிஸ் பின்புறம் வசித்து வருபவர் பக்கவத்சிங் வயது 53 , இவர் திருமண மண்டபம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் தன்னுடைய மகனின் படிப்பிற்காக விருதுநகரைச் சார்ந்த ஜெயபிரகாஷ் என்பவரிடம் பணம் கடனாக வாங்கி இருந்ததாகவும் அதற்காக செக் புக் மற்றும் ப்ரோநோட் கொடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. வாங்கிய பணத்தை பகவத்சிங் வட்டியும் அசலமாக அடைத்து விட்டதாகவும் இதனால் அவர் ஆவணங்களை கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஜெயபிரகாஷ் தர மறுத்து பகவத்சிங்கை மிரட்டிய நிலையில் இது குறித்து பகவத்சிங் விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரை வாபஸ் பெற கூறி விருதுநகர் மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த பகவத்சிங்கை வழி மறைத்து ஜெயபிரகாஷ் மற்றும் ஆறுமுகம் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை மேற்கு காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
Tags:    

Similar News