மறைத்து எடுத்து வரப்பட்ட கோழிக்குஞ்சுகள் பறிமுதல்

கேரளாவில் இருந்து மறைத்து எடுத்து வரப்பட்ட கோழிக்குஞ்சுகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-04 04:21 GMT

கேரளாவில் இருந்து மறைத்து எடுத்து வரப்பட்ட கோழிக்குஞ்சுகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.


கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான புளியரையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த லாரியை புளியரை சோதனைச் சாவடியில் சோதனை செய்த போது லாரிக்குள் பதுக்கி வைக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த லாரி கேரளாவிற்கு தமிழக போலீசார் புளியரை சோதனை சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News