மதுபாட்டில்கள் பறிமுதல்

வந்தவாசி அருகே பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-02 01:39 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னாவரம் கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (57) என்பவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News