அனுமதி இன்றி விற்பனை செய்த மது பாட்டில்கள் பறிமுதல் !
அனுமதி இன்றி விற்பனை செய்த மது பாட்டில்களை, தேர்தல் நிலை குழுவினர் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-04-05 07:32 GMT
பெரம்பலூர் ஒன்றியம் அம்மாபாளையத்தில் அனுமதி இன்றி விற்பனை செய்த மது பாட்டில்களை, தேர்தல் நிலை குழுவினர் பறிமுதல் செய்தனர்.
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நிலை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில்பெரம்பலூர் துறையூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அம்மாபாளையம் அரசு டாஸ்மாக் அருகே 180 ml அளவுள்ள , ரூபாய் 51, ஆயிரம் மதிப்பிலான 340 மதுபாட்டில்களை , அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் என்பவர் விற்பனை செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மது பாட்டில்களை தேர்தல் நிலை குழுவினர் கைப்பற்றினார்கள், இந்த மது பாட்டில்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர் .