ஜீன்ஸ் பேண்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 42 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 683 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-21 06:58 GMT
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்டில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பயணியிடமிருந்து ரூபாய் 42 லட்சத்தி 69 ஆயிரம் மதிப்புள்ள 683 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News