திருமண வீட்டில் மோதல்

கருங்கல் அருகே திருமணம் நிகழ்ச்சியில் பெண்ணை கேலி செய்ததை தட்டி கேட்டதால் ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2024-05-22 09:33 GMT

கருங்கல் அருகே திருமணம் நிகழ்ச்சியில் பெண்ணை கேலி செய்ததை தட்டி கேட்டதால் ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.


கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் காக்கவிளை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ் ணன். இவருடைய மகன் அஸ்வின்.அதே பகுதி யைச் சேர்ந்த கனகராஜ் மகன் சோபனகுமார் இவர்கள் இருவரும் வெள்ளியாவிளை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.அப்போது அங்கேவந்த சகாயநகரைச்சேர்ந்த அஸ்வின் என்பவர் பெண்களை கிண்டல் செய்துள்ளார். இதை அஸ்வினும், சோபனகுமாரும் தட்டி கேட்டுள்ளனர். இதனால் முன்விரோதம் ஏற்பட்டது.இதைதொடர்ந்து மாலையில் முன்விரோதம் காரணமாக பெண்களை கிண்டல் செய்த அஸ்வின் கத்தியுடன் கண்டால் தெரியும் 5 பேருடன் வந்து காக்கவிளையை சேர்ந்த அஸ்வின் மற்றும் சோபன குமாரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சோபன குமார் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News