திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-13 07:16 GMT

ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப் பெருந்தகையை இழிவாக பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை அவதூறாக பேசி வரும் அண்ணாமலையை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கவுன்சிலரும் மாவட்ட பொதுக் குழு உறுப்பினருமான ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.

பொருளாளர் TST பொன்னுசாமி, நெசவாளர் அணி கதிரேசன், இளங்கோவன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோவிந்தன், நந்தகோபால், கோபாலகிருஷ்ணன்,Ex PCC ராமசாமி, மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், சந்திரசேகர், ராஜீவ் காந்தி, ஜோதி, யாத்ரா மாநில செயலாளர் SSK செல்வகுமார், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதீஷ் தனகோபால், முன்னாள் கவுன்சிலர் லோகநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் கண்ணன், வர்த்தக அணி தாமரைக்கண்ணன், முன்னாள் வட்டார தலைவர் சந்திரன், முன்னாள் நகர தலைவர் பெரியசாமி, TCTU மாவட்ட செயலாளர் வேலன், சிறுபான்மை பிரிவு அபிபுல்லா, சிக்கந்தர், நகர நிர்வாகி தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்திற்கு பின் செய்தியாளர் களிடம் பேசிய நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார் கூறும் போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகையை இழிவாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அண்ணாமலை நாமக்கல் மாவட்டத்தில் எங்கு வந்தாலும் அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று கூறினார்.

Tags:    

Similar News