பா.ஜ.க.வை அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-09 01:32 GMT

 காங்கிரஸ் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு துணைபோகும் வங்கியையும், பிரதமர் மோடி தலை மையிலான பா.ஜனதா அரசை கண்டித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசக்குமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன், மாநில செயலாளர் தயானந்தம், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் நகர தலைவர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் விஜய ரங்கன், சிவா, ராஜ்குமார், நாராயணசாமி, நகரமன்ற கவுன்சிலர் சுரேஷ்ராம், மாவட்ட பொதுச்செயலாளர் விஸ்வநாதன், ஐ.என்.டி.யு.சி. மாநில இணைச்செயலாளர் காஜாமொய்தீன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம், எஸ்.சி.பிரிவு மாவட்ட தலைவர் சேகர், வட்டார தலைவர்கள் ராதா, அய்யப்பன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வினோத்குமார், இலக்கிய பிரிவு தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News