மணப்பாறையில் சமரச தீா்வு விழிப்புணா்வு பேரணி

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சமரச தீா்வு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது

Update: 2024-04-09 02:23 GMT

விழிப்புணர்வு 

வட்ட சமரச மைய சாா்பில் சமரச தீா்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி பேருந்து நிலையம் பெரியாா் சிலை பகுதியிலிருந்து தொடங்கியது. பேரணியை மணப்பாறை சாா்பு- நீதிபதியும், வட்ட சமரச மைய தலைவருமான நீதிபதி எல்.ஷகிலா தொடங்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மதுரை சாலையில் நிறைவுற்றது. இதில், குற்றவியல் நீதிபதி வி.கோமதி, சமரசா்கள், அரசு தரப்பு வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Tags:    

Similar News