திருமால்பூர் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் கட்டும் பணி துவக்கம்

வாலாஜாபாத் மற்றும் திருமால்பூர் ஆகிய இரு ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் கட்டுவதற்கு, கடக்கால் போடும் பணியை துவக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 13:28 GMT

  வாலாஜாபாத் மற்றும் திருமால்பூர் ஆகிய இரு ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் கட்டுவதற்கு, கடக்கால் போடும் பணியை துவக்கப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் வரையில், மின்சார ரயில் இருப்புப்பாதை உள்ளது. இதில், வாலாஜாபாத், திருமால்பூர் ஆகிய இரு ரயில் நிலையங்களிலும், ஒரு ரயில் செல்லும் போது, மற்றொரு ரயில் கடந்து செல்வதற்கு ஏற்ப மற்றுப்பாதை உள்ளது. இதுபோன்ற நேரங்களில், ஒரு நடைமேடையில் இருந்து, மற்றொரு நடை மேடை ரயில் பயணியர் கடந்து செல்ல முடியாத அளவிற்கு, இடையூறாக இருந்தது. இந்த ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என, ரயில் பயணியர் இடையே நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து இருந்தனர். இதை ஏற்று, ரயில்வே நிர்வாகம், வாலாஜாபாத் மற்றும் திருமால்பூர் ஆகிய இரு ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் கட்டுவதற்கு, கடக்கால் போடும் பணியை துவக்கி உள்ளனர். பில்லர்கள் போடும் பணி நிறைவிற்கு பின், நடை மேம்பாலம் அமைக்கப்படும் என, ரயில்வே துறை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News