மதுராந்தகம் ஏரியில் கட்டுமான பணி தொடக்கம்

மதுராந்தகம் ஏரியில் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-06 14:51 GMT
மதுராந்தகம் ஏரியில் கட்டுமான பணி விறுவிறு"

மதுராந்தகத்தில் உள்ள ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2, 500 ஏக்கர். ஐந்து மதகுகள் வழியாக, 4, 000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3, 000 ஏக்கர் நிலங்களும் என, மொத்தம் 7, 000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

தற்போது, 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏரியை துார் வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்கல்களை புதுப்பித்து, கதவணையுடன் கூடிய உபரிநீர் போக்கி கட்டமைக்கும் பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகின்றன.

மதுராந்தகம் பாசன நீர் வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: மதுராந்தகம் ஏரியை துார் வாரி ஆழப்படுத்துதல் மற்றும் கலங்கல்களை புதிதாக அமைக்கும் பணி, 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இதில், 12 சதவீதம் நிதியான 15 கோடி ரூபாய் மதிப்பில்,

ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான 1, 058 ஏக்கர் பரப்பளவில், 233 ஏக்கர் பரப்பளவில் மண் அள்ளும் பணி நடைபெற உள்ளது. இதில், 2 முதல் 3 அடி ஆழம் வரை மண் அள்ளும் பணியில், 22 சதவீதம் பணி நடந்துள்ளது.

Tags:    

Similar News