காங்கிரஸ் எம்எல்ஏ அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

சுரண்டையில் காங்கிரஸ் எம்எல்ஏ அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-15 07:18 GMT

ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி, தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் விவசாயிகளுக்கு கிடைக்க அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News