செஞ்சியில் தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

செஞ்சியில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-20 13:59 GMT

செஞ்சியில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட செஞ்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியதர்ஷினி தலைமையில் செஞ்சியில் நடைபெற்றது. உதவி தேர்தல் அலுவலர்கள் செஞ்சி வளர்மதி, மயிலம் முகுந்தன், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், கண்காணிப்பு நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு நிலை குழுக்களின் பணிகள், வாக்குச்சாவடி நிலை குழுக்களின் பணிகள், தேர்தல் அலுவலர் பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் தாசில்தார்கள் செஞ்சி ஏழுமலை, மேல்மலையனூர் முகமது அலி, தனி தாசில்தார்கள் துரைச்செல்வன, புஷ்பாவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News