செஞ்சி வட்டார விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்

செஞ்சியில் வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் செஞ்சி வட்டார விவசாயிகளுக்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்

Update: 2023-12-30 10:27 GMT

செஞ்சி வட்டார விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் செஞ்சி வட்டார விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் விஜயசந்தர் தலைமை தாங்கினார். அட்மா குழு தலைவர் வாசு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் திட்டங்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை வழங்கினார்.

முன்னதாக தோட்டக்கலை அலுவலர் பிரகாஷ், உதவி விதை அலுவலர் குமார், பட்டு வளர்ச்சி துறை இளநிலை ஆய்வாளர் கவுரி ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மூலம் பயிர் சாகுபடி செய்து அதிக மகசூல், அதிக லாபம் பெறு வது குறித்து அட்மா குழு விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் அட்மா குழு உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி மேலாளர்கள் ஜெய்கணேஷ், கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News