அங்கன்வாடி பள்ளிக்கூடத்தில் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு
திருப்பூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கூடத்தில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார்ஜிகிரியப்பனவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-02-21 06:35 GMT
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 15-வேலம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிக்கூடத்தை மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பிஞ்சு குழந்தைகளிடம் உனது பெயர் என்ன, என்ன சாப்பிட்டாய், என அன்பாக கேட்டு அறிந்தார். பின்னர் அங்குள்ள வருகை பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் பெயரைக் கூறி அழைத்து தெரிந்து கொண்டார். குழந்தைகளும் அன்பாக பதில் அளித்தனர். மேலும் அங்கன்வாடியில் உணவுப் பொருட்களின் இருப்பு, தரமான உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறதா..? இருப்பிட வசதி எவ்வாறு உள்ளது என அங்கன்வாடி கட்டிடத்தை சுற்றி ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள குறைகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் உதவி செயற்பொறியாளர் பாபு, இளநிலை பொறியாளர் கணேஷ் செந்தில்குமார், மற்றும் அங்கன்வாடி மைய உதவியாளர்கள் உள்பட பலர் இருந்தனர்.