காடையூர் அருகே குடிசை தீப்பற்றி எரிந்து சாம்பல்

காங்கயம் அடுத்த காடையூர் பகுதியில் சாக்கு மூட்டைகளை அடுக்கும் குடிசையில் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியது‌. இதனை அடுத்து அப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது

Update: 2024-03-02 13:35 GMT

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த காடையூர் பகுதியில் கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் அரிசி ஆலையின் அருகே தனியாருக்கு சொந்தமான சாக்கு மூட்டைகள் அடுக்கும் இடமுள்ளது. சுமார் 160 சதுர அடி அளவுள்ள இந்த ஓலைக் குடிசையில் சாக்கு மூட்டைகளை அடுக்கி வைப்பர்.

இந்த நிலையில் நேற்று எதிர்பாராத விதமாக கூறையின் மேல் தீப்பிடித்தது. இதனை அடுத்து மளமளவென தீ பரவியதால் குடிசை முழுவதும் எரியத் தொடங்கியது. இதனை அடுத்து இடத்தின் உரிமையாளர் தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக குடிசைக்குள் எந்தவொரு ஆட்களும்,

பொருட்களும் இல்லை என்பதால் அஷம்பாவிதங்கள் ஏதுமின்றி தீ அமைக்கப்பட்டது. இதனை அடுத்து சிறிது நேரம் அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது.

Tags:    

Similar News