கெங்கவல்லி காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

கெங்கவல்லி காவல் நிலையத்தில் நேற்று ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-25 00:46 GMT

கெங்கவல்லி காவல் நிலையத்தில் நேற்று ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


 கெங்கவல்லி காவல் நிலையத்தில் நேற்று ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் பேரூர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் டிஎஸ்பி சதீஷ்குமார் பேசியபோது உங்கள் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்தால் உடனடியாக எங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கள்ள சாராயத்திலிருந்து காப்பாற்ற நீங்கள் ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என்றும் மேலும் கள்ள சாராயம் விற்பனை செய்யும் நபர் யார் என்று எங்களுக்கு கூற வேண்டும் மேலும் உங்கள் ஊர் பகுதியில் சாராயம் விற்பனை செய்யாமல் தடுக்க வேண்டும் என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் கூறினார் வந்திருந்த அனைவரும் ஒத்துழைப்பு தருகிறோம் என்றும் கூறினார்கள். இதனை அடுத்து ஆலோசனைக் கூட்டம் முடிவு பெற்றது.

Tags:    

Similar News