நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனை ஜோர்

நல்லம்பள்ளி நாட்டுக்கோழி வாரச்சந்தையில் நாட்டு கோழிகளின் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து விற்பனை அதிகரித்தது.

Update: 2024-04-14 05:50 GMT
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு கூடிய சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நாட்டுக்கோழிகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். மேலும் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்தது. இன்று சிறிய நாட்டுக் கோழிகள் 250 ரூபாய் முதல் பெரிய அளவிலான நாட்டுக் கோழிகள் 1,000 ரூபாய் வரையில் விற்பனையானது. மேலும் இன்று ஒரே நாளில் 4 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News