பல்லடம் அருகே ஸ்கூட்டரில் வந்த தம்பதியிடம் கத்தி முனையில் வழிப்பறி!

பல்லடம் அருகே ஸ்கூட்டரில் வந்த தம்பதியிடம் கத்தி முனையில் நகை, பணம் வழிப்பறி நடந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-27 13:40 GMT

பைல் படம்

பல்லடம் அருகே ஸ்கூட்டரில் வந்து நம்பதியிடம் கத்தி முனையில் நகை பணம் லழிப்பறி! பல்லடம் அருகே உள்ள மங்களம் கோல்டன் நகரை சேர்ந்தவர் சித்தி (வயது 48) டெய்லர். இவரும் இவரது மனைவியும் நேற்று முனதினம் திண்டுக்கல் சென்று விட்டு பல்லடம் வந்தனர். பின்னர் பல்லடம் பெட்ரோல் பங்க் பகுதியில் நிறுத்தி இருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு பல்லடம்-திருப்பூர் மெயின் ரோட்டில் சென்று கரையான் புதூர் வழியாக மங்கலம் கோட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்து 3 மர்ம நபர்கள் இவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 21/2 பவுன் நகை, ரூ. 3000 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

Tags:    

Similar News