‘நமக்கு நாமே' திட்டம் மூலம் ரூ.15 லட்சத்தில் மயான மேடை

சேலம் மாவட்டம் 23-வது வார்டில் ‘நமக்கு நாமே' திட்டம் மூலம் ரூ.15 லட்சத்தில் மயான மேடையை மேயர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

Update: 2024-06-20 00:53 GMT

சேலம் மாவட்டம் 23-வது வார்டில் ‘நமக்கு நாமே' திட்டம் மூலம் ரூ.15 லட்சத்தில் மயான மேடையை மேயர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.


சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், 23-வது வார்டுக்குட்பட்ட, வேடிக்கவுண்டர் காலனி பகுதியில் 'நமக்கு நாமே' திட்டம் மூலம் ரூ.15 லட்சத்தில் மயான மேடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் சிவகாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி மயானத்தை திறந்து வைத்தார்.

மாநகராட்சி நிதிக்குழு தலைவர் குமரவேல், வார்டு தி.மு.க. செயலாளர் அன்பழகன், துணைச்செயலாளர் அறிவழகன் நிர்வாகிகள் கருணாநிதி, தங்கராஜ், ஏழுமலை, ராஜேந்திரன், பெரியசாமி, மணிகண்டன், சுந்தரி, சண்முகவேல், சுரேஷ், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News