காளப்பநாயக்கன்பட்டியில் நாளை கரண்ட் கட்!

நாமக்கல் மாவட்டம், காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில், நாளை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-29 06:55 GMT

மின்தடை 

நாமக்கல் மாவட்டம், காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில், நாளை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்... நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை, 30ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் கீழ் கண்ட இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும். காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News