குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிப்பு

Update: 2024-01-03 08:55 GMT

குடிநீர் வினியோகம் பாதிப்பு

பழனி வரதமாநதி அணை அருகே குடிநீர் விநியோகம் செய்யும் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது‌. இந்த பிரதான குழாயில் இருந்து பல கிராமங்களுக்கு குடிநீர் செல்கிறது. இதனால்ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் விநியோகம் செய்யவேண்டிய குடிநீர் குழாய் உடைந்து மூன்று நாட்களாக தண்ணீர் வெளியேறி வருகிறது. ஆயக்குடி பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். பொதுமக்கள் தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதாக இல்லை. பொதுமக்கள் நலனில் அதிகாரிகளும் பாராமுகமாக உள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் குடங்களுடன் தள்ளாடுகின்றனர்.
Tags:    

Similar News