மதுரை ரயில் நிலையத்தில் பெண் சடலம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில் நிலைய தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2024-01-31 09:46 GMT

மதுரை ரயில் நிலையத்தில் பெண் சடலம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில் நிலைய தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்க ஒரு பெண் சடலம் கிடப்பதாக இன்று மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் மற்றும் திலகர்திடல் போலீசார் இணைந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்த பெண் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் திலகர்திடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News