பேக்கரி 'கேக்'கில் இறந்த நிலையில் பல்லி; கடைக்கு சீல்

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்த பேக்கரி கடையில் கேக்கில் இறந்த நிலையில் பல்லி இருந்ததை அடுத்து, கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2024-05-03 14:52 GMT

  தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்த பேக்கரி கடையில் கேக்கில் இறந்த நிலையில் பல்லி இருந்ததை அடுத்து, கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி பஸ் நிறுத்தத்தில் தனியார் பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியில் பெண் ஒருவர் கேக் வாங்கி சாப்பிட்டுள்ளார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த பெண் சாப்பிட்ட கேக்கில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்தது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுருக்கு

Tags:    

Similar News