ஆதரவற்ற முதியவர் மரணம்

பள்ளிவாசல் அருகே ஆதரவற்ற முதியவர் ஒருவர் காலில் பலத்த புண் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-01-31 04:53 GMT

ஆதரவற்ற முதியவர் மரணம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் வாவர் பள்ளிவாசல் அருகே ஆதரவற்ற முதியவர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்தார். இந்த நிலையில் அவரது காலில் பலத்த புண் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்ட நிலையில் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிகிச்சைக்காக நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த முதியவர் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News