வலிப்பு நோயால் வாலிபர் உயிரிழப்பு- காவல்துறை வழக்கு பதிவு

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கேரள வாலிபர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-02-15 11:42 GMT
கேரள மாநிலம், திருவனந்தபுரம், நெடியாநிலா தலையால் பகுதியைச் சேர்ந்தவர் தின்னுவிஜய் வயது 28. இவரது மனைவி கௌசல்யா வயது 24. இவர்கள் இருவரும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புத்தாம்பூர் சமத்துவபுரம் பகுதியில் அண்மையில் வசித்து வந்தனர். மேலும் தின்னு விஜய்க்கு ஏற்பட்ட கழுத்து வலி காரணமாக கரூர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு திடீரென இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் தின்னுவிஜயின் மனைவி கௌசல்யா, கரூர் மருத்துவ நகர் பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டில் தங்கி, தின்னுவிஜயை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கௌசல்யா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த தின்னுவிஜயின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Tags:    

Similar News