பன்றிப் பண்ணை அதிபருக்கு கொலை மிரட்டல்

திங்கள் சந்தை அருகே பன்றி பண்ணை அதிபரை கத்தியால் குத்த முயன்றவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Update: 2024-05-27 02:50 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள நடுத்தேரி என்ற இடத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் வில்லுக்குறி பகுதியில் பன்றிப்பண்ணை நடத்தி வருகிறார்.       சம்பவ தினம் ரவிச்சந்திரன் அவரது நண்பர் வைகுண்டராஜன் என்பவருடன் வில்லுக்குறிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்துள்ளதால் அருகில் உள்ள ஒரு சுடுகாட்டில் ஒதுங்கி உள்ளனர். அந்த நேரத்தில் ரவிச்சந்திரன் சிறுநீர் கழித்துள்ளார்.      

அப்போது அருகில் நின்ற அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் எங்கள் சுடுகாட்டை நாசப்படுத்துகிறாயா?  என கேட்டு அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனை ரவிச்சந்திரன் தட்டி கேட்டுள்ளார்.    இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் திடீரென கத்தி எடுத்தது ரவிசந்திரனை குத்த பாய்ந்துள்ளார். ரவிச்சந்திரன் குனிந்து கொள்ளவே குத்து சுடுகாட்டின் தடுப்பு சுவரில் பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், வைகுண்டராஜன் இருவரும் அலறி சத்தம் போட்டு உள்ளனர்.   இதை அடுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த தினேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சம்பவம் குறித்து ரவிச்சந்திரன் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News